ஆகுபெயர்
ஒன்றன் இயற்பெயர் தன்னைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வருவது.
1. முதலாகுபெயர் (அ ) பொருளாகுபெயர் :
எ .கா: மல்லிகை சூடினாள்
மல்லிகை என்பது கொடியாகிய முதற்பொருளை குறிக்காமல் பூ என்னும் சினையைக் குறிக்கிறது .2. இடவாகுபெயர் :
எ .கா: பூண்டிப் பள்ளியா வந்து பேசியது ?
'பள்ளி' என்னும் இடப்பெயர் அப்பள்ளியில் பயிலும் மாணவிக்கு ஆகி வந்தது .3. காலவாகுபெயர் :
எ .கா: திசம்பர் பூ
திசம்பர் என்னும் மாதப் பெயர் அம்மாதத்தில் பூக்கும் பூவிற்கு ஆகி வந்தது .4. சினையாகு பெயர் :
எ .கா ; வெற்றிலை நட்டான்
'வெற்றிலை ' என்பது சினையாகிய இலையை குறிக்காமல் அதன் முதல் பொருளாகிய கொடிக்கு ஆகி வந்தது5. பண்பாகுபெயர் :
எ .கா : வெள்ளை அடிப்போம்
'வெள்ளை ' என்பது நிறப்பண்பு அது நிறத்தை குறிக்காமல் சுண்ணாம்பைக் குறித்து வந்தது .6. தொழிலாகுபெயர் :
எ .கா : பொங்கல் உண்போம்
"பொங்கல் " என்பது பொங்குதலாகிய தொழிற்பெயர் . தொழிலை குறிக்காமல் , அத்தொழிலால் ஆகும் உணவை குறிக்கும்7. எண்ணல் அளவை ஆகுபெயர் :
எ .கா : ஒன்று பெற்றால் ஒளிமயம்
"ஒன்று " என்னும் எண்ணுப்பெயர் , அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்குப் பெயராகி வந்தது.8. எடுத்தல் அளவை ஆகுபெயர் :
எ .கா : ஐந்து கிலோ என்ன விலை ?
'ஐந்து ' அளவை குறிக்காமல் அவ்வளவுடைய பொருளுக்கு (அரிசி , பருப்பு ) ஆகி வருவது .9. முகத்தல் அளவை ஆகுபெயர் :
எ .கா : நான்கு லிட்டர் தேவை
'லிட்டர் ' என்னும் முகத்தல் அளவைப் பெயர் , அவ்வளவை குறிக்காமல் , அவ்வளவுடைய நெய் , எண்ணெய் , முதலியவற்றுள் ஒன்றை குறிக்கும் .10. நீட்டல் அளவை ஆகுபெயர் :
எ .கா : மூன்று மீட்டர் கொடு
'மீட்டர் ' அளவு கோலைக் குறிக்காது அதனால் அளக்க பெறும் துணிக்கு ஆகிவந்தது11. சொல்லாகு பெயர் :
எ .கா : வள்ளுவர் சொல் வாழ்க்கைக்கு இனிது
"வள்ளுவர்சொல் " என்பது சொல்லைக் குறிக்காது பொருளுக்கு பெயராகி வந்ததால் இது சொல்லாகுபெயர்12. தனியாகுபெயர் :
எ .கா : பாலை இறக்கு
'பாலின் ' பெயர் பாலைக் குறிக்காமல் பாத்திரத்தை குறிக்கிறது. ஓர் இடத்தில் உள்ள ஒரு பொருளின் பெயர் (தானி ) அது சார்ந்திருக்கும் இடத்திற்கு (தானத்திற்கு ) பெயராகி வருவது .13. கருவியாகு பெயர் :
எ .கா : யாழ் கேட்டு மகிழ்ந்தாள்
'யாழ் ' என்னும் கருவி இசைக்கு ஆகி வருவது.14. காரியவாகுபெயர் :
எ .கா : நான் சமையல் கற்றேன்
'சமையல் ' என்னும் காரியத்தின் பெயர் அதன் காரணத்திற்கு பெயராகி வருவது .15. கருத்தாவாகு பெயர் :
எ .கா : திருவள்ளுவரைப் படித்துப்பார்
'திருவள்ளுவர் ' என்பது அவரால் இயற்றப் பெற்ற நூலுக்கு ஆகிவந்ததால் கருத்தாவாகு பெயர் .16. உவமையாகு பெயர் :
எ .கா : நாரதர் வருகிறார்
'நாரதர் ' என்னும் பெயர் அவரை குறிக்காமல் அவரைப் போன்ற வேறொருவருக்கு ஆகி வருவது .17. இருமடியாகு பெயர் :
எ .கா : புளி காய்த்தது
'புளி ' பழத்திற்கு ஆகி , பின்பு அப்பழத்தை உடைய மரத்திற்கும் ஆகி வந்துள்ளது . ஒரு சொல் இரண்டு நிலையில் ஒன்றோடுஒன்று தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது18. அடையெடுத்தவாகு பெயர் :
எ .கா : வெற்றிலை நட்டான்
வெற்றிலை = வெறுமை + இலை - வெறுமை இலை என அழைக்கப்பட்டு வெற்றிலையாகியது . வெறுமை என்பது இலைக்கு அடையாகும் . இலை என்பது அடைக்குரிய பொருளாகும் .
இலைக்குரிய அடையான வெறுமையைச் சேர்த்து 'வெற்றிலை நட்டான் ' என்னும் பொது அடையும் (வெறுமை ) , சினையும் (இலை ) அதன் முழுப்பொருளுக்கு ஆகி வருவது .19. இருபெயரொட்டு ஆகுபெயர் :
இரண்டு பெயர்ச் சொற்கள் சேர்ந்து ஒரு பொருளை குறிப்பதுண்டு. இரண்டு சொற்களுள் ஒன்று சிறப்பு பெயராகவும் , மற்றொன்று பொதுப் பெயராகவும் அமைந்து ஒரே பொருளைக் குறிப்பது .
எ .கா : வாழை மரம்
வகரக் கிளவி ( வகரம் - சொல் , கிளவி - சொல் )
வாழை - மரவகையில் ஒன்றின் சிறப்பு பெயராகும் . மரம் - பொது பெயர் , இரண்டும் சொற்களும் சேர்ந்து ஒரு பொருளை குறிக்கும்.
20. விட்டவாகு பெயர் :
எ .கா : சென்னை வளர்கிறது
சென்னை - இடத்தை குறிக்காமல் , தன்னிடத்தில் வாழும் மக்களை குறிக்கும் .
21. விடாத ஆகுபெயர் :
எ .கா : இனிப்புத் தின்றான்
இனிப்பு - என்னும் சுவையை குறித்த சொல் , தனக்குரிய இனிமைப் பொருளை விட்டு விடாமல் அச்சுவையை உடைய தின்பண்டத்தைக் குறிக்கும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக