TNPSC Tamil Question

சனி, 14 ஏப்ரல், 2018

sol

சொல் 

ஓர்  எழுத்தானது  தனித்தேனும் , ஒன்றுக்கு  மேற்பட்ட  எழுத்துகள்  தொடர்ந்து  ஒரு பொருளை உணர்த்துமானால்  சொல் எனப்படும் .

சொல்லின்  வேறுபெயர்கள் : பதம், மொழி , கிளவி 

சொல் பாகுபாடு :


இலக்கண வகை :

  1. பெயர்ச்சொல் 
  2. வினைச்சொல் 
  3. இடைச்சொல் 
  4. உரிச்சொல் 

இலக்கியவகை :

  1. இயற்சொல் 
  2. திரிசொல் 
  3. திசைச்சொல் 
  4. வடசொல் 
 1. இயற்சொல் :
இயற்சொல் என்பது இயல்பாகப் பொருள் உணரும் சொல்லாகும்
  • மண் , பொன்  - பெயர் இயற்சொல் 
  • நடந்தான் , வந்தான்  - வினை இயற்சொல் 
  • அவனை , அவனால்  - இடைஇயற்சொல் 
  • அழகு , அன்பு  - உரி இயற்சொல் 
2. திரிசொல் 
திரிசொல் என்பது கற்றோர்க்கு மட்டும் பொருள் விளங்கக்  கூடியது என்பதும்  இயற்சொல்லில் வேறுபட்டது என்பதும் கவனிக்கத்தக்கது.
  • கிள்ளை , சுகம் , தத்தை - கிளி - பெயர்த்திரிசொல் 
  • யானை ,  கோழி , சங்கு  - வாரணம் 
  •  கழறினான் , செப்பினான் , பகர்ந்தான் 
  • நீக்கினான் , கொண்டான்  - வரைந்தான் - வினைதிரிசொல் 
  •  சேரும் , வருதும் , கொல் - இடைதிரிசொல்
  •  சால , உறு , தவ ,நனி , கூர் , கழி  - மிகுதி  - உரிதிரிசொல் 
  • காப்பு , கூர்மை , அச்சம் ,கரிப்பு , விளக்கம், சிறப்பு ,மணம்  - உரிதிரிசொல் 
.3. திசைச்சொல் 
 கொடுந்தமிழ் நாடுகள் 12 பெயர்கள் :
  1. தென்பாண்டி நாடு 
  2. குட்டநாடு 
  3. குடநாடு 
  4. கற்காநாடு 
  5. வேள்நாடு 
  6. பூழி நாடு 
  7. பன்றி நாடு 
  8. அருவா நாடு 
  9. அருவா  வட தலை 
  10. சீத நாடு 
  11. மலைய மான் நாடு 
  12. புனல் நாடு (அ ) சோழ நாடு
 4. வடசொல் :
ஆரியத்துக்கும் தமிழுக்கும் பொது எழுத்தும் , தமிழை ஒத்து வடதிசையிலிருந்து செந்தமிழ் நிலத்து வந்து வழங்குவன வட சொல் எனப்படும் .
  •  
ஓரெழுத்துக்களால் ஆகிய சொற்கள் 42:
  • ஆ ,ஈ ,ஊ ,ஏ ,ஐ ,ஓ - உயிர்  வருக்கத்தில்  ஆறு 
  • மா ,மீ ,மூ,மை ,மோ  - மகர  வருக்கத்தில் ஐந்து 
  • தா , தீ ,தூ ,தே , தை  - தகர  வருக்கத்தில் ஐந்து 
  • பா ,பூ , பே ,பை ,போ  - பகர  வருக்கத்தில் ஐந்து 
  • நா ,நீ , நே , நை ,நோ  - நகர வருக்கத்தில்ஐந்து 
  • கா , கூ ,கை , கோ  - ககர வருக்கத்தில் நான்கு 
  • வா , வீ ,,வை ,வெள   - வகர வருக்கத்தில் நான்கு 
  • சா ,சீ ,சே ,சோ  - சகர வருக்கத்தில் நான்கு 
  • யா  - யகர  வருக்கத்தில் ஒன்று 
  • நொ , து  - தனி  குறில்  பதம் இரண்டு

பதம் :

  1.  பகுபதம் ( இரண்டு (2) எழுத்து முதல் ஏழு  எழுத்துக்கள்(7)  வரை  வரும் )
  2. பகாப்பதம் (இடைச்சொல்லும் , உரிச்சொல்லும்  பகா பதங்களாகவே இருக்கும் )(இரண்டு (2) எழுத்து முதல் ஒன்பது  எழுத்துக்கள்(9)  வரை  வரும் )

பகாப்பதம் :

  • பிரித்தல்  பொருள்  தராத  சொல்  பகாப்பதம் .
பகாப்பதம்  நான்கு  வகைப்படும் :
  1. பெயர்ப்  பகாப்பதம்  -  மரம் , நாய் , நீர்
  2. வினைப்  பகாப்பதம்  - உண் , காண் , எடு
  3. இடைப்பகாப்பதம் - தில் , மன் , பிற
  4. உரிப்  பகாப்பதம் - சால , உறு , நனி , கடி

 பகுபதம் :

  • பகுதி , விகுதி , இடைநிலை , எனப் பிரிக்கப் படும்  பதம்  பகுபதம் .
பகுபதம்  இரண்டு  வகைப்படும் :
  • பெயர்ப்பகுபதம்  
  • வினைப்  பகுபதம் 

பெயர்ப்பகுபதம் :

  • பொருள் , இடம் , காலம்  , சினை , குணம் , தொழில்  ஆகியவற்றை  அடியாக  கொன்டு  தோன்றுவது .
எ .கா :
  •  பொன்னன்  =  பொன் + ன் + அன்( பொன் -பொருட்பெயர் அடியாக  உள்ளது )
  • ஊரான்  = ஊர்  +  அன்  (ஊர் - இடப்பெயர்  அடியாக  உள்ளது )
  • ஆதிரையான் = ஆதிரை + ய் + ஆன் (ஆதிரை- காலப்பெயர் )
  • கண்ணன் = கண் +ண் +அன்  (கண் - சினை  பெயர் )
  • கரியன் = கருமை  + அன்  (கருமை - பண்புப்பெயர் )
  • நடிகன் = நடி + க் + அன் ( நடி - தொழிற்  பெயர் )

 வினைப்  பகுபதம் : 

  • எ .கா : செய்தான் = செய் + த் + ஆன்


 பகுபத உறுப்புகள் :

  •  பகுதி , விகுதி , இடைநிலை  , சாரியை , சந்தி , விகாரம்  என்னும்  ஆறு உறுப்புகள்  பகுபத  உறுப்புகள்  ஆகும் .
1. பகுதி :
  • பகுபதத்தில்  முதலில்  நின்று  பொருள்  தருவது . (ஏவல் வினையாக  வரும்,)
எ .கா :
படித்தான்  =  படி  என்பது  பகுதி
 ஓடினான் = ஓடு  என்பது  பகுதி 
வந்தான் = வா  என்பது  பகுதி
2.  விகுதி :
  • பகுபதத்தில்  இறுதியில்  நிற்பது விகுதி  எனப்படும் .
எ .கா : 
நடந்தான்  = ஆன் - ஆண் பால்  விகுதி
நடந்தாள்  = ஆள்  - பெண் பால்  விகுதி
நடந்தனர் = அர் - பலர்பால்  விகுதி
 நடந்தது  =  து  - ஒன்றன்  பால்  விகுதி 
நடந்தன = அ - பலவின்பால்  விகுதி
 3. இடைநிலை :
  • பகுதிக்கும் , விகுதிக்கும்  இடையில்  வருவது  இடைநிலை  எனப்படும் . இடைநிலை  காலம்  காட்டுவதால் காலங்காட்டும்  இடைநிலை  எனப்படும் .
1. நிகழ்கால இடைநிலைகள் : கிறு , கிண்று , ஆநின்று
எ .கா :
உண்கிறான்  - கிறு 
உண்கின்றான் - கின்று 
உண்ணாநின்றான் - ஆநின்று 
2. இறந்தகால  இடைநிலை : த் .ட் .ற் ,இன்  
எ .கா :
பார்த்தான் - த் 
 உண்டான் - ட் 
வென்றான்  - ற்
பாடினான்  - இன் 
3. எதிர்கால  இடைநிலை : ப் , வ்
 எ .கா :
உண்பான்  - ப் 
வருவான் - வ் 
4. எதிர்மறை  இடைநிலை : இல் , அல் , ஆ
எ .கா : 
உண்டிலன் = உண் + ட் + இல் + அன்
காணலன்  = காண் + அல் +அன்
பாரான்  = பார் + ஆ + ஆன்
4. சந்தி :
  • பகுதிக்கும் , இடைநிலைக்கும்  இடையில்  வரும் , விகுதிக்கும்  இடையிலும்  வரும் .
எ .கா : 
பார்க்கின்றான் = பார்  + க் +கிறு +ஆன்
 5. சாரியை :
  • பெயர்ச்சொல்லையும்  , வினை சொல்லையும்  சார்ந்து  வருவது  சாரியை  எனப்படும் . இடைநிலைக்கும் , விகுதிக்கும்  இடையில்  வரும் .
எ .கா :
உண்டனன்  = உண் + ட் +அன் +அன்
 [அன் , ஆன் , இன் , அல் , அற்று , இற்று , அந்து , அம் ]
6.விகாரம் :
  • பகுதி,விகுதி ,இடைநிலை  போன்றவை  சேரும்  போது  இடையில்  ஏற்படும் மாறுபாடு  விகாரம்  எனப்படும் .
எ .கா :
"வந்தான்  "  என்னும்  சொல்லில்  உள்ள  "வா "  என்னும்  பகுதி  "வ " எனக்  குறைந்து  குறுகள்  விகாரம்  ஆயிற்று .




Share:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Amazon.in

Blogroll

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

Text Widget

model question 2012

TNPSC 2012  தமிழ் இலக்கணம்  1. 'ஆற்றீர் ' - வேர்ச் சொல்லை தேர்வு செய்  ஆற்றி  ஆற்றிய  ஆற்று  ஆற்றுதல்  2. பின...

இந்த வலைப்பதிவில் தேடு

Blogroll

Pages - Menu

Blogger Pages

Blogger templates

captain_jack_sparrow___vectorHello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Learn More →

Popular Posts

Recent Posts

Unordered List

Definition List

Ads Here

Pages

Theme Support