TNPSC Tamil Question

புதன், 25 ஏப்ரல், 2018

Sotrrodar vagaikal

சொற்றோடர்  வகைகள் 

1. செய்தித்  தொடர் :
ஒரு  கருத்தினைச்  செய்தியாக  தெரிவிப்பது .
எ .கா : திருவள்ளுவர்  திருக்குறளை  இயற்றினார்
2. வினாத் தொடர் :
வினாப்  பொருளைத்  தரும்  தொடர் .
எ .கா : என்ன ? ஏன் ? எப்படி ?
3. உணர்ச்சித்  தொடர் :
பேசும்  செய்திகள்  உணர்ச்சியை  வெளிப்படுத்தும்  தொடர்களாக   அமைந்தால்  உணர்ச்சித்  தொடர்  ஆகும் .
எ .கா : என்னே ! இமயமலையின்  உயரம் !
4. தனிநிலைத்  தொடர் :
ஓர்  எழுவாய்  (அ ) பல  எழுவாய்  ஒரு  பயனிலையை  கொண்டு  முடிவது தனிநிலை  தொடர் .
எ .கா :
அழகன்  பாடம்  எழுதுகிறான் .
மா  , பலா , வாழை  என்பன  முக்கனிகள்
5. தொடர்நிலை  தொடர் :
ஓர்  எழுவாய்  பல  பயனிலைகளைக்  கொண்டு  முடிவது  தொடர்நிலை  தொடர் .
 எ .கா : கார்மேகம்  கடுமையாக  உழைத்தார் ; அதனால்  வாழ்வில்  உயர்ந்தார் 
6. கலவைத்  தொடர் :
ஒரு  தனிச்சொற்றொடர்  ஒன்று  அல்லது  அதற்கு  மேற்பட்ட  துணைத்  தொடர்களுடன்  கலந்து  வருவது  கலவை  தொடர்.
எ .கா :நேற்று  புயல்  வீசியதால் , பள்ளிக்கு  விடுமுறை.
7. கட்டளைத்  தொடர் :
ஒரு  செயல்  அல்லது  சில  செயல்களைப்  பின்பற்றும்  படி  ஆணையிட்டுக்  கூறுவது  கட்டளைத்  தொடர் ஆகும் .
எ .கா :  பார்த்தப்போ , கவனமாகப்  படி
8. செய்வினைத்  தொடர் :
எழுவாய் செய்யும்  வினை  அமைந்த  தொடர்  செய்வினைத்  தொடர்  எனப்படும் .
எ .கா : மாவட்ட  ஆட்சியர்  கொடி  ஏற்றினர்
9. செயப்பாட்டு  வினைத்தொடர் :
இத்தொடரில்  செயப்படுபொருள்  , எழுவாய், பயனிலை  என்னும்  வரிசையில்  சொற்கள்  அமைந்துள்ளன . எழுவாயோடு "ஆல் "  என்னும்  மூன்றாம்  வேற்றுமை  சேர்க்கப்பட்டுள்ளது .
இவ்வகைத்  தொடரில்  "படு, பட்டது , பெறு , பெற்றது " என்னும்  துணை  வினைகளில்  ஒன்று  பயனிலையோடு  சேர்ந்து  வரும் .
எ .கா :
 உலகத்  தமிழ்ச்  செம்மொழி  மாநாடு  குடியரசு  தலைவரால்  தொடங்கி  வைக்கப்  பெற்றது .
10. தன்  வினைத்  தொடர் :
ஒரு  எழுவாய்  , ஒரு  செயலைத்  தானே  செய்வதால்  ,  தன்  வினைத்  தொடராகும்
எ .கா :
புரட்சிக் கொடி  திருக்குறள்  கற்றாள்
11. பிற  வினைத்  தொடர் :
ஒரு  எழுவாய் , ஒரு செயலை  பிறரைக்  கொண்டு  செய்விப்பதால் , பிற வினைத்  தொடராகும் .
எ .கா : புரட்சிக்கொடி  திருக்குறள் கற்பித்தால் 
12. நேர்க்கூற்று :
ஒருவர்  பேசுவதை , அவர்  பேசிய  படியே  கூறுவது  இத்தொடரின்  இயல்பு . இதில்  மேற்கோள்  குறிகள்  இடம்பெறும் ; தன்மை , முன்னிலை  பெயர்கள்  இடம்பெறும் ; இங்கு , இப்போது , இவை  எனச்   சுட்டுப்பெயர்கள்  வரும் .
தேன்மொழி  பொன்னியிடம் "நான்  நாளை  மதுரைக்குச்  செல்வேன் " என்றாள் 
13, அயற்கூற்றுத் தொடர் :
ஒருவர்  அல்லது  பலரின்  உரையாடல்  அயலார்  கூறுவது  போல்  அமைப்பது  ஆயர்கூற்று .
எ .கா :
 பொன்னியிடம்  தேன்மொழி  தான்  மறுநாள்  மதுரைக்கு செல்வதாகக்  கூறினாள் .
 14. உடன்  பாட்டுத்  தொடர் :
செயல்  அல்லது  தொழில்  நிகழ்வதை  மறுப்பின்றி  ஏற்பது உடன்  பாட்டுத்  தொடர்
எ .கா :
கலா  கட்டுரை  எழுதினால்
15. எதிர்மறைத்  தொடர் :
 செயல்  அல்லது  தொழில்  நிகழ்வதை மறுத்துக்  கூறுவதால் எதிர்மறைத்  தொடர்
எ .கா :
 கலா  கட்டுரை எழுதிலள்
16. பொருள்  மாறா  எதிர்மறைத்  தொடர் :
எ .கா : கலா  கட்டுரை  எழுதாமல்  இரால்
Share:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Amazon.in

Blogroll

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

Text Widget

model question 2012

TNPSC 2012  தமிழ் இலக்கணம்  1. 'ஆற்றீர் ' - வேர்ச் சொல்லை தேர்வு செய்  ஆற்றி  ஆற்றிய  ஆற்று  ஆற்றுதல்  2. பின...

இந்த வலைப்பதிவில் தேடு

Blogroll

Pages - Menu

Blogger Pages

Blogger templates

captain_jack_sparrow___vectorHello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Learn More →

Popular Posts

Recent Posts

Unordered List

Definition List

Ads Here

Pages

Theme Support