TNPSC Tamil Question

திங்கள், 23 ஏப்ரல், 2018

porulkol

பொருள்கோள்

ஒரு  செய்யுளில்  உள்ள  சீர்களையோ  அடிகளையோ  பொருள்  உணர்வுக்கு  ஏற்ற  வகையில்  அமைத்துக்  கொள்ளும்  முறையை  பொருள்கோள் .

பொருள்கோள்  எட்டு  வகைப்படும் :

  1. ஆற்று  நீர்ப்  பொருள்கோள்
  2.  மொழிமாற்று  பொருள்கோள்
  3. நிரல்நிறை ப்  பொருள்கோள்
  4. விற்பூட்டுப் பொருள்கோள்
  5. தாப்பிசைப்  பொருள்கோள்
  6. அளைமறி  பாப்புப்   பொருள்கோள்
  7. கொண்டு கூட்டுப்   பொருள்கோள்
  8. அடிமறி  மாற்றுப்பொருள்கோள்
1.  ஆற்று  நீர்ப்  பொருள்கோள்:
இடையறாத செல்லும்  ஆற்று  நீரைப்   போல  பாடலின்  சொற்கள்  முன் பின்  மாறாது  நேரே  சென்று  பொருள்  கொள்வது ஆற்று  நீர்ப்  பொருள்கோள் ஆகும் .
 எ .கா :
பொறிவாயில்  ஐந்தவித்தான்   பொய்யர்  ஒழுக்க
 நெறிநின்றார்  நீடுவாழ்  வார் 
2. மொழிமாற்று  பொருள்கோள்:
 ஓரடியுள்  உள்ள  சொற்களை  அவை  தரும்  பொருளுக்கு  ஏற்ப  மாற்றிக்  கூறுதல் மொழிமாற்று  பொருள்கோள் ஆகும் 
எ .கா :
அருளல்லது  யாதெனில்  கொல்லாமை  கோறல்
பொருளல்லது  அவ்வூன்  தினல்
[அருள்  யாதெனில்  கொல்லாமை ; அருள்  அல்லது  யாதெனில் உயிர்க்   கொலை  எனப்  பொருள் ]
 3. நிரல்நிறை ப்  பொருள்கோள்:
 மாறி மாறி  இருக்கின்ற  சொற்களை  வரிசையாக  அமைத்துப்  பொருள்கொள்வது  நிரல்நிறை ப்  பொருள்கோள் ஆகும் .
எ .கா :
அன்பும்  அறனும்  உடைத்தாயின் இல்வாழ்க்கை
 பண்பும்  பயனும்  அது .
[இக்குறட்பாவில்  அன்பிற்கும்ப்  பண்பும்  ,அறத்துக்குப்  பயனும்  நிரல்  நிறையாக  வந்து  அமைந்துள்ளதால் நிரல்நிறை ப்  பொருள்கோள்  ]
 4. விற்பூட்டுப்  பொருள்கோள் :
வில்லின்  இருமுனைகளையும்  இணைத்து  கட்டுதல்  போல செய்யுளின் முதலில்  அமைந்துள்ள  சொல்லும், இறுதியில்  அமைந்துள்ள  சொல்லும்  பொருள்  படப் பொருத்துவது விற்பூட்டு  பொருள்கோள்  அல்லது  பூட்டுவிற்  பொருள்கோள்
 எ .கா :
 நெருநல்  உளன்ஒருவன்  இன்றில்லை  என்னும்
பெருமை  உடைத்திவ்  வுலகு
5.  தாப்பிசைப்  பொருள்கோள்:
ஊஞ்சலின்  நடுநின்ற  கயிறு  முன்னும்  பின்னும்  சென்று  வருவது  போல செய்யுளின்  நடுவில்  அமைந்திருக்கும்  சொல் , செய்யுளின்  முதலிலும்  இறுதியிலும்  அமைந்திருக்கும்  சொற்களுடன்  பொருந்திப்  பொருளை  தருவது  தாப்பிசைப்  பொருள்கோள்.
தாம்பு + இசை  = தாப்பிசை
எ .கா :
இறந்தார்  இறந்தார்  அனையர்  சினத்தைத்
துறந்தார்  துறந்தார்  துணை
 6. அளைமறி  பாப்புப்   பொருள்கோள்:
பாம்பு  புற்றில்  தலை  வைத்து  நுழையும் போது  , தலை  மேலாகவும்  உடல்  அடுத்தும்  செல்வது  போலச்  செய்யுளின்  இறுதியிலிருந்து  சொற்களை  எடுத்து  முதலில்  வைத்துக் 
கூட்டிப் பொருள்  கொள்வது  அளைமறி  பாப்புப்   பொருள்கோள் (அளை - புற்று , பாப்பு - பாம்பு )
7.  கொண்டு கூட்டுப்   பொருள்கோள்:
 செய்யுளின்  பல  அடிகளிலும்  கூறப்பட்டுள்ள சொற்களைப்  பொருளுக்கு  ஏற்பக்  கூட்டிப்  பொருள் கொள்வது  கொண்டு கூட்டுப்   பொருள்கோள்
 8. அடிமறி  மாற்றுப்பொருள்கோள்:
 செய்யுளின்  எல்லா  அடிகளையும்  முன்பின்னாக  மாற்றிப்  பொருள்  கொண்டாலும்  பொருளும்   ஓசையும்  சிதையாமல்  வருவது  அடிமறி  மாற்றுப்பொருள்கோள்.

Share:

1 கருத்து:

Amazon.in

Blogroll

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

Text Widget

model question 2012

TNPSC 2012  தமிழ் இலக்கணம்  1. 'ஆற்றீர் ' - வேர்ச் சொல்லை தேர்வு செய்  ஆற்றி  ஆற்றிய  ஆற்று  ஆற்றுதல்  2. பின...

இந்த வலைப்பதிவில் தேடு

Blogroll

Pages - Menu

Blogger Pages

Blogger templates

captain_jack_sparrow___vectorHello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Learn More →

Popular Posts

Recent Posts

Unordered List

Definition List

Ads Here

Pages

Theme Support